×

மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை

நரசிங்கபுரம், ஏப்.27: ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் மாரியம்மன் கோயில் அருகே, நேற்றிரவு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர், கஞ்சா மற்றும் மது போதையில் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்தனர். இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், அந்த வாலிபர்களை தட்டிக்கேட்டார். இதில் சுப்பிரமணிக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே சுப்பிரமணி ஆத்தூர் போலீசார் ஸ்டேஷனுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை appeared first on Dinakaran.

Tags : Narasinghapuram ,Narasinghapuram Mariamman temple ,Athur ,Subramani ,
× RELATED டூவீலர் மீது பிக்கப் வேன் மோதியதில் 2 பேர் காயம்