×

டூவீலர் திருடியவர் கைது

சேலம், ஏப்.25: சேலம் கன்னங்குறிச்சி மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (43). டூவீலர் மெக்கானிக்கான இவர், அதே பகுதியில் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த வங்கி மேலாளர் சரவணன் என்பவர், தனது டூவீலரை பழுது நீக்கம் செய்ய நிறுத்தியிருந்தார். இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு பட்டறையில் நிறுத்தியிருந்த சரவணனின் டூவீலர் மாயமானது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் சக்திவேல் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், டூவீலரை திருடிய கோரிமேடு அருகேயுள்ள சித்தகவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்த ராஜா (47) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்த டூவீலரை பறிமுதல் செய்தனர்.

The post டூவீலர் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Sakthivel ,Kannangurichi ,Mahalakshmi ,Saravanan ,Kannanchurichi ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே வழக்கு...