×

கூடங்குளம் கடல் பகுதியில் மிதவை கப்பலில் வந்து பாறையில் சிக்கிய நீராவி உற்பத்தி கலன்களை மீட்கும் பணி தீவிரம்..!!

நெல்லை: கூடங்குளம் கடல் பகுதியில் மிதவை கப்பலில் வந்து பாறையில் சிக்கிய நீராவி உற்பத்தி கலன்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி கலன்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது தரை தட்டியது.

பின்னர் நீராவி உற்பத்தி கலனை மீட்பதற்காக கடந்த 18 நாட்களாக இந்திய அணுமின் உற்பத்தி கழகம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 14-ம் தேதி ஒரு இழுவை கப்பலை கொழும்புவில் இருந்து கொண்டு வரப்பட்டது. தரை தட்டிய மிதவை கப்பல் பாறைப்பகுதியில் சிக்கியுள்ளதால் அதில் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. அந்த சேதத்தை சரி செய்த பின்பு தான் மிதவைப் கப்பலை மீட்க முடியும் என்பதால் அதிகாரிகள் அதுவரை மீட்பு பணிகளை நிறுத்தி வைத்தனர்.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து சாலை அமைத்து அதன் மூலம் நீராவி உற்பத்தி கலனை இழுத்துவர வேண்டும் என ஆலோசனை தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த 10 நாட்களாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து முடிந்தது. தற்போது நீராவி உற்பத்தி கலன் அதிநவீன 30 டயர்கள் கொண்ட இழுவை கப்பல் மூலம் இழுக்கும் பணிகளை கூடங்குளம் அணுமின் நிலையம் மேற்கொண்டுள்ளது. இந்த நீராவி உற்பத்தி கலன்களை மீட்கும் பணியில் கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post கூடங்குளம் கடல் பகுதியில் மிதவை கப்பலில் வந்து பாறையில் சிக்கிய நீராவி உற்பத்தி கலன்களை மீட்கும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Natangkulam ,Paddy ,neatangulam ,
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...