நெல்லை: தென் மாவட்டங்களில் மட்டும் சாதி பிரச்னைகள் ஏற்பட என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சாதிய பாகுபாடு, கஞ்சா விற்பனை மீது தமிழக அரசு அழுத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாலகிரிஷ்ணன் தெரிவித்துள்ளார். சாதிய பிரச்னைகளுக்கு தீர்வுகாண அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென நெல்லையில் அவர் பேட்டியளித்துள்ளார். நாங்குநேரி சம்பவத்தில் சகோதரனை காப்பாற்றிய சந்திரா செல்விக்கு வீரதீர செயலுக்கான விருது தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
The post தென் மாவட்டங்களில் மட்டும் சாதி பிரச்னைகள் ஏற்பட என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும்: பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.
