×

காடையாம்பட்டி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

காடையாம்பட்டி: காடையாம்பட்டி அருகே மாரகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மனைவி தர்ஷினிபிரியா(25). இவர் மாரகவுண்டன்புதூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் மணிபாரதி(27) என்ற வாலிபர் இவரது மளிகை கடைக்கு சென்று தீப்பெட்டி வாங்கியுள்ளார்.  அப்போது தர்ஷினி பிரியாவிடம், இரட்டை அர்த்தத்தில் பேசி தவறாக நடக்க முயன்றுள்ளார்.  அவர் பயத்தில் சத்தம் போட்டதும், அவரது கணவர் மற்றும் அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தர்ஷினி பிரியா தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிபாரதியை கைது செய்து, ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : Kadayampatti ,
× RELATED காடையாம்பட்டி அருகே பயங்கரம் வெடி...