ஜாகர்த்தா : ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது இந்தோனேஷிய அரசு. இந்த சட்டம் வரும் 28ம் தேதியில் இருந்து படிப்படியாக அமலுக்கு வரவுள்ளது. குழந்தைகளின் மனநலனை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
