சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உயர்மட்ட 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் டெண்டருக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கும் வரை பணிகள் தொடங்கப்படாது என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. டெண்டரில் நிராகரிக்கப்பட்ட நிறுவனம் அரசிடம் 5 நாட்களில் மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுளளது. அதன் மீது 10 நாட்களில் முடிவெடுக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
