- முதல் அமைச்சர்
- சென்னை
- மாவட்டம்
- திமுக
- செயலாளர்கள்
- எம் சுப்பிரமணியன்
- பி.கே.சேகர்பாபு
- மெயிலாய் டி.வேலு
- மாதவரம் சுதர்சனம்
- ஆர்.டி. சேகர்
- சித்தராசு
- தமிழ்
- தமிழ்நாடு
- ஜனாதிபதி
- மு.கே ஸ்டாலின்
- பொதுச்செயலர்
- Duraimurugan
- பொருளாளர்
- டி.ஆர்.பாலு
- முதன்மை செயலாளர்
- துணை பொது செயலாளர்கள்
- ஓமந்துரார் வளாகம்
- அண்ணா சேலை, சென்னை
சென்னை: சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், சிற்றரசு ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் 7வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட திமுக முன்னணியினர் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி ஆகஸ்ட் 7ம் தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்படும், காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.
இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள்-முன்னாள்-இந்நாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணியினரும் பங்கேற்க வேண்டும்.
