2 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவியை கோரியுள்ளது தமிழக அரசு

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவியை தமிழக அரசு கோரியுள்ளது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவை தமிழக அரசு அழைத்துள்ளது.

The post 2 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவியை கோரியுள்ளது தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: