தற்போது மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. விஜயகாந்துக்கு நுரையீரல் சுவாசத்தை சீராக்க வென்டிலேட்டர் உதவியுடன் ஆக்ஸிஜன் வழங்க இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட சிகிச்சை குறித்து விஜயகாந்த் குடும்பத்துடன் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மியாட் மருத்துவமனை தகவல் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவை appeared first on Dinakaran.