- 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கமுதி : கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கோயில் திருவிழாவில் 2,000 கிலோ ஆட்டுக்கறி, 1,500 கிலோ அரிசியில் கமகம அசைவ விருந்து தயார் செய்யப்பட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது.
தொடர்ந்து 2,000 கிலோ கறி, 1,500 கிலோ அரிசி சாதம் சமைக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 வரை கமகம அசைவ விருந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களும் சரிசமமாக கலந்து கொண்டு சாப்பிட்டனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
The post கமுதி அருகே கோயில் திருவிழாவில் 2,000 கிலோ ஆட்டுக்கறி, 1.50 டன் அரிசியில் கமகம அசைவ விருந்து appeared first on Dinakaran.