நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்; உணர்வோடும், புரிதலோடும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் கனிமொழி பேட்டி

சென்னை: நாட்டை காப்பாற்ற வேண்டியல் தேர்தல் என்பதால் உணர்வோடும், புரிதலோடும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, மயிலாப்பர் செயின்ட் எப்பாஸ் பள்ளியில் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல் என்ற தெளிவோடு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இங்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் இந்த உணர்வோடும், புரிதலோடும் நாம் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மட்டுமே போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றிபெறும்.

The post நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்; உணர்வோடும், புரிதலோடும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் கனிமொழி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: