அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது. செந்தில் பாலாஜி வழக்கை உடனடியாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி முன்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் முறையிட்டார். இதனை ஏற்று வழக்கு நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: