வங்கதேச வன்முறையால் மேகாலயா வழியாக ஊடுருவ முயன்ற 6 பேர் கைது

ஷில்லாங்: வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் கிழக்கு ஜைந்திய மலைப் பகுதிகள் வழியாக இந்திய எல்லைக்குள் 6 நபர்கள் நுழைய முயற்சிப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய இந்திய பாதுகாப்புப் படையினர், ரதச்சேரா பகுதியில் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்களில் 4 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் உள்ளூர்வாசிகள் அவர்கள் எல்லையைக் கடக்க உதவி செய்ததும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டவர்கள், உள்ளூர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வங்கதேசத்தில் வன்முறையால் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகரித்துள்ளனர்.

The post வங்கதேச வன்முறையால் மேகாலயா வழியாக ஊடுருவ முயன்ற 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: