ஆனால் இந்தாண்டு 5,6 மாதங்களாகியும் வைப்பு தொகை திருப்பி தரப்படவில்லை. இந்த தொகையை கல்லூரி கட்டணத்தில் கழித்து கொள்ளவும் நிர்வாகம் மறுக்கிறது என்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் கேட்டால், நிதி பற்றாக்குறை காரணமாக வைப்பு தொகையை திருப்பி அளிக்க முடியவில்லை என்றும், விரைவில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி, வைப்பு தொகையை மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மருத்துவ மாணவர்களின் வைப்பு தொகையை திருப்பித் தர நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
