தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்: துரை வைகோ

சென்னை: தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக போட்டியிட விரும்பும் 6 தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதாகவும், விருதுநகர், திருச்சி, ஈரோடு, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சி ஆகிய 6 தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்து பணிகளை தொடங்கி உள்ளோம் எனவும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 6 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளோம் எனவும் துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும் எங்களின் விருப்பத்தை கூட்டணியின் தலைவரான முதலமைச்சர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்: துரை வைகோ appeared first on Dinakaran.

Related Stories: