மேலும். வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் தொலை தொடர்பு வசதி மற்றும் இணைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது என்றும் அசாம் மாநிலத்தில் மிகப்பெரிய செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது என்றும் ஜனாதிபதி பேசும் போது, மணிப்பூர், மணிப்பூர் என எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். மணிப்பூர் வன்முறை தொடர்பாக பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இதனிடையே இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி காலம் குறித்து பேசிய முர்மு, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25ம் தேதி எமர்ஜெஞ்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம் அரசியல் சாசனத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டது என பேசியபோதும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
The post மணிப்பூர் வன்முறை குறித்து பேசாமல் எமர்ஜென்சி காலம் குறித்து பேசிய ஜனாதிபதி திரெளபதி முர்மு : எதிர்க்கட்சிகள் முழக்கம் appeared first on Dinakaran.