திருவாபரணம் அணிந்த ஐயப்பனை நேற்று இரவு வரை பக்தர்கள் தரிசித்தனர். 21ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் 5.30 மணியளவில் திருவாபரணம் பந்தளத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து காலை 6 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்று பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. நடையை சாத்தி முடித்த பின்னர் பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் மேல்சாந்தி சபரிமலை கோயில் சாவியை ஒப்படைப்பார். இதன்பின் அடுத்த ஒரு வருடத்திற்கு சபரிமலையில் பூஜைகளை நடத்த வேண்டும் என்று கூறி அந்த சாவியையும், பணக்கிழியையும் மேல்சாந்தியிடம் பந்தளம் மன்னர் பிரதிநிதி கொடுப்பார். இதன்பின் மன்னர் பிரதிநிதி 18ம் படி வழியாக இறங்கி பந்தளத்திற்கு புறப்பட்டு செல்வார். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 13ம் தேதி திறக்கப்படும்.
The post மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடைகிறது சபரிமலையில் நாளை வரை பக்தர்களுக்கு அனுமதி: 21ம் தேதி நடை அடைப்பு appeared first on Dinakaran.