செங்கல்பட்டு அருகே ஏரியில் ஆண் சடலம் மீட்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, ஏரியில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு அருகே பரனூர் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் நேற்று செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பரனூர் ஏரிக்கு விரைந்த போலீசார் ஏரியில் மிதந்த 30 வயது மதிக்கதக்க ஆண் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலமாக கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செங்கல்பட்டு அருகே ஏரியில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: