மதுரையில் டாஸ்மாக் பணியாளர்கள், விற்பனையாளர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மதுரை: மதுரையில் டாஸ்மாக் பணியாளர்கள், விற்பனையாளர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி மதுக்கடையை திறந்து வைத்த புகாரில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா நடவடிக்கை எடுத்துள்ளார். மேலூர் கச்சிராயன்பட்டி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் செல்வம், கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விற்பனையாளர்கள் பால்ராஜ், பாண்டி ஆகியோரையும் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

The post மதுரையில் டாஸ்மாக் பணியாளர்கள், விற்பனையாளர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: