மதுரை : மதுரை மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மகளிர் விடுதியில் கடந்த 12ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்த வார்டன் புஷ்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சட்டவிரோதமாக செயல்பட்ட புகாரில் மகளிர் விடுதி கட்டடம் அண்மையில் இடிக்கப்பட்டது.