கோம்பை, ராஜபாளையம், சிப்பிப்பாறை உள்ளிட்ட நாட்டு நாய்களும் கண்காட்சியில் பங்கேற்று மேடையில் ஒய்யார நடைபயின்றன. பல்வேறு பிரிவுகளாக நாய்களின் எடை உயரம், அவற்றின் உடல் அமைப்பு செயல்திறன் மற்றும் உரிமையாளர்களுக்கு கட்டுப்படும் விதம் ஆகியவற்றை பரிசோதித்த நடுவர்கள் தேர்வு செய்த சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
மதுரை கேனைன் கிளப் சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியை காண சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் குழந்தைகளுடன் வருகை தந்திருந்தனர். வீட்டை பாதுகாத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் நாய்களை அலங்கரித்து உரிமையாளர்கள் அழைத்து வந்த விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
The post மதுரையில் 38வது நாய்கள் கண்காட்சி: 55 வகையை சேர்ந்த 500 நாய்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.