போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான 9 வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான 9 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது.

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி ஒன்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை கண்டித்தும், மின்கட்டணம் மற்றும் பேருந்து கட்டணத்தை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக அரியலூரில் 9 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்துசெய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் அமைச்சர் சிவசங்கர் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசியல் உள்நோக்கத்துடன் தன்னை துன்புறுத்தும் நோக்கில் இந்த வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதால், இதனை ரத்துசெய்யவேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அமைச்சருக்கு எதிராக 9 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான 9 வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Related Stories: