மக்களவை தேர்தல் – மதுக்கடைகளை மூட உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ம் தேதி மாலை 6 மணி வரை மதுபான கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு, 48 மணி நேரத்துக்கு முன்பாக மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுபான கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 17 மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 மாலை 6 மணி வரை மதுபான மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதியும் மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தல் – மதுக்கடைகளை மூட உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: