காட்டு யானைகள் பேரிஜம் பகுதிக்கு இடம் பெயர்ந்ததை தொடர்ந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க சுற்றுலா இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மோயர் சதுக்கம் பகுதியில் காட்டுயானைகள் புகுந்து கடை ஒன்றை சேதப்படுத்திள்ளது. இதனால் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் நபர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே யானை கூட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கொடைக்கானலில் கடைகளை உடைத்து யானைகள் அட்டகாசம்: சுற்றுலா பயணிகள் அச்சம் appeared first on Dinakaran.