இதில் சம்பவ இடத்திலேயே லியோனா பவுலோஸ் என்ற பெண் கருகி இறந்தார். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே மருத்துவமனையில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட மேலும் 5 பேர் பலியானார்கள்.
இந்தநிலையில் உடலில் 50 சதவீத தீக்காயங்களுடன் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொடுபுழாவை சேர்ந்த ஜான் (78) என்ற முதியவர் நேற்று இறந்தார். அதைத்தொடர்ந்து குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. ஜானின் மனைவி லில்லி குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post கொச்சி குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் சாவு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு appeared first on Dinakaran.