சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு எதிரே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை முதற்கட்டமாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். மேம்பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
The post கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு எதிரே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
