கர்நாடகாவிடம் தண்ணீர் இருக்கிறது, ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் தர மறுக்கிறது. ஆங்காங்கே சிறு, சிறு அணைகளை கட்டி கே.ஆர்.அணை நீர் தேக்கி வைத்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு கர்நாடகா வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து ஒன்றிய அமைச்சரிடம் விளக்கியுள்ளோம். தமிழ்நாட்டுக்கு நீர்திறக்குமாறு கர்நாடகாவை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளோம். கர்நாடகாவுக்கு தண்ணீர் தரும் எண்ணம் இல்லை. நெருக்கடியான நேரத்தில் நீர்பகிர்வை எப்படி தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி காவிரி நீரை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
The post கர்நாடகாவிடம் தண்ணீர் இருக்கிறது, ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் தர மறுக்கிறது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.
