உடனடியாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல் கரை ஒதுங்காததால் போலீசார் கடலில் நீந்தி சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அந்த நபருக்கு சுமார் 40 வயது இருக்கலாம். யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கடலில் குளிக்கும்போது உயிரிழந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கன்னியாகுமரி கடற்கரையில் பரபரப்பு; கடலில் மிதந்து வந்த ஆண் சடலம்: சுற்றுலா பயணிகள் அலறியடித்து கரைக்கு திரும்பினர் appeared first on Dinakaran.