காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி விடுவிப்பு: வைகோ அதிரடி நடவடிக்கை

சென்னை: காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் இ.வளையாபதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதி கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிவிப்பு:

காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் இ.வளையாபதி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். காஞ்சிபுரம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜி.கருணாகரன் காஞ்சிபுரம் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகரச் செயலாளர்களுடன் இணைந்து தொடர்ந்து கழகப் பணியாற்றுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி விடுவிப்பு: வைகோ அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: