மாஞ்சோலை விவகாரத்தை மாநிலங்களவையில் பேசுவேன்: – ஜி.கே.வாசன்

நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாஞ்சோலை எஸ்டேட் பிரச்சனையில் அரசு தலையிட்டு, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். இது பற்றி நான் மாநிலங்களவையில் பேசுவேன். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை வெளியுறவுத்துறை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாஞ்சோலை விவகாரத்தை மாநிலங்களவையில் பேசுவேன்: – ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.

Related Stories: