கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, வானபுரம் உள்ளிட்ட 11 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், வானபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவ சேரி சேஷசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த ஜுன் 18-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தினர். இவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 65 பேர் உயிரிழந்தனர். 8 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தனர். இதில் சிவராமன் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மனோஜ் முனியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, வானபுரம் உள்ளிட்ட 11 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: