ஈட்டியெறிதல் பயிற்சியின்போது உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஈட்டியெறிதல் பயிற்சியின்போது உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம், பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் (15) என்பவர் வடலூரிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 24ம் தேதி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஈட்டியெறிதல் பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக சிறுவன் கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்ததால் பலத்த காயமடைந்த நிலையில்,

நேற்று முன்தினம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், சிறுவனின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

The post ஈட்டியெறிதல் பயிற்சியின்போது உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: