அதேபோன்று தூத்துக்குடி- சென்னை இடையே ஜன சதாப்தி ரயில் இயக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த ரயில் சாதாரண கட்டணத்துடன் பகல் நேரத்தில் சென்னைக்கு பயணிக்க தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு உபயோகமாக இருக்கும். எனவே தூத்துக்குடி மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடி- சென்னை இடையே பகல் நேர ஜன சதாப்தி ரயிலை இயக்க வேண்டும். பாலக்காடு- தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் ஒரு மூன்றடுக்கு ஏ.சி பெட்டியும், ஒரு 2 அடுக்கு ஏ.சி பெட்டியும், ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும் இணைக்க வேண்டும். தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தூத்துக்குடி – சென்னை இடையே பகல் நேர ஜன சதாப்தி ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.