சிறைக்குள் கூடுதல் வசதிகள் கேட்டு சிறை அதிகாரிகளிடம் நடிகர் தர்ஷன் மோதல்? ஜாமீன் கிடைப்பதில் மீண்டும் சிக்கல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த தனது ரசிகர் ரேணுகாசாமியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு, பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 4ம் தேதி நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் மீது ரேணுகாசுவாமி கொலை வழக்கின் 3,991 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பல்லாரி சிறையில் இருக்கும் தர்ஷன், சிறைக்குள் அதிகாரிகளை மிரட்டும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘சிறையில் வழங்கப்படும் வசதிகள் தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் தர்ஷன் அடிக்கடி வாக்குவாதம் செய்கிறார். பிடிவாதமான அணுகுமுறையை கையாள்கிறார். அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினர். கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா மற்றும் 15 பேரின் நீதிமன்ற காவலை வரும் 17ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. சிறைக்குள் தர்ஷன் உள்ளிட்டோர் பிரச்னை செய்வதால் அவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

The post சிறைக்குள் கூடுதல் வசதிகள் கேட்டு சிறை அதிகாரிகளிடம் நடிகர் தர்ஷன் மோதல்? ஜாமீன் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: