ஹமாஸ் படையினரை முற்றிலும் ஒழிப்பதை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பொதுமக்களில் பெரும்பாலும் குழந்தைகள், பெண்களும் கொல்லப்படுகின்றனர். இஸ்ரேல் கைப்பற்றியுள்ள காசாவில் உள்ள ரபா பகுதியில் அந்நாட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேறு இடங்களில் தஞ்சம் அடைந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் தெற்கு காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்வதேச அமைப்புகள் பணயக்கைதிகளுக்காக அனுப்பும் ஒவ்வொரு மருந்து பெட்டியில் இருந்து 1,000 பாலஸ்தீனர்களுக்கு மருந்து வழங்கப்படும் என்று ஹமாஸ் தெரிவித்திருந்தது.
The post இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.