சிறு பிரச்னைக்கு கூட ஐஓசி நிர்வாகம் தங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்து சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது. இதனால் 8 மாத காலமாக வேலையில்லாமல், டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை கண்டித்து 300 லாரிகள் இன்று (10ம் தேதி) வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. உடனடியாக லாரி உரிமையாளர் சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை ஈடுபடாவிட்டால், வரும் 26ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பெட்ரோலிய நிறுவனங்களில் செயல்படும் டேங்கர் லாரிகள் ஒன்றிணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post இந்தியன் ஆயில் நிறுவன டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.