மேலும், மழை நீர் உள்ளே செல்லாதவாறு தார்பாயை போர்த்தியுள்ளனர். ஆனால், கனமழை பெய்து வருவதால் கீழ்ப்பகுதியில் சிறிது, சிறிதாக மண் சரிந்து வருகிறது. ஒருவேளை பெரிய அளவில் மண் சரிந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் இடிந்து தரைமட்டமாகும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. தற்போது தடுப்பு சுவரை அப்புறப்படுத்தியது தான் மண் சரிவுக்கு காரணம் என கிராமத்தினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஒருவேளை மண் சரிந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் சேர்ந்து கீழே உள்ள ஓட்டல், வீடுகள் சேதமடையும் என கூறப்படுகிறது.
The post தொடர் மழை எதிரொலி ஆபத்தில் கலெக்டர் அலுவலகம் appeared first on Dinakaran.