மும்பை: இந்தியா கூட்டணி தகர்ந்துவிடும் என நினைத்த மோடியின் கனவு தகர்ந்துவிட்டது என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் யாதவ் தெரிவித்துள்ளார். 2வது நாளாக நடைபெறும் I.N.D.I.A கூட்டணிக்கு 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்தியா கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய நிதிஷ்குமார், இந்தியா கூட்டணி உடையும் என்ற மோடியின் கனவு தகர்ந்துவிட்டது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் பாஜகவின் திட்டம் நிறைவேறாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். இவ்வாறு தெரிவித்தார்.
The post I.N.D.I.A கூட்டணி தகர்ந்துவிடும் என நினைத்த மோடியின் கனவு தகர்ந்துவிட்டது: நிதிஷ்குமார் பேச்சு appeared first on Dinakaran.