The post மணிப்பூரில் 2 வீடுகளுக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.
மணிப்பூரில் 2 வீடுகளுக்கு தீ வைப்பு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் மேற்கு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் வன்முறை வெடித்தது. சுமார் பத்து மணியளவில் பட்சோய் காவல்நிலையத்துக்குட்பட்ட நியூ கெய்தெல்மான்பி பகுதியில் இரண்டு வீடுகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். மேலும் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மெய்தி சமூகத்தை சேர்ந்த பெண்கள் அந்த பகுதியில் திரண்டனர். ஆனால் வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.