இதனால் வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வேளாங்கண்ணி பேராலயம், மாதாகுளம், நடுத்திட்டு, பழைய வேளாங்கண்ணி, கடற்கரை சாலை, வேளாங்கண்ணி கடற்கரை என எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாக காணப்படுகின்றனர். இவர்கள் வேளாங்கண்ணி கடற்கரையில் கடலில் இறங்கி குளிப்பதுடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை ஆங்கில புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர் என்பதால் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post தொடர் விடுமுறை எதிரொலி: வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.