இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி விடுதலை சிகப்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில், கடவுள்களை அவமதிக்கும் வகையில் தாம் பேசவில்லை. அரசியலுக்காக பழிவாங்கும் நோக்குடன் போலியாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் காவல்துறை விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
The post இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக வழக்கு உதவி இயக்குநருக்கு நிபந்தனை முன் ஜாமீன் appeared first on Dinakaran.