விசாரணையில் அந்த நிறுவனம் சுமார் 1,09,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரூசோ, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரூசோ ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக ரூசோ தரப்பில் தெரிவித்ததையடுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2,438 கோடி மோசடி ஆருத்ரா கோல்ட் இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.