அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, இதுதொடர்பாக நிலையான வழிகாட்டு முறை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பொது இடங்களில் கட்சி கூட்டங்கள் மற்றும் கொடிகம்பங்கள் அமைப்பதற்கு கட்டணம் வசூலிக்கிறீர்களா?. ஒவ்வொரு கொடி கம்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கட்சி பொதுக்கூட்டங்கள், கொடிக் கம்பங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் கொடிக்கம்பங்களுக்கு கட்டணம்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
