ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

டெல்லி: ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவில் கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று முதல் 5 நாட்களும், ஆந்திராவில் இன்று முதல் 4 நாட்களும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தெலுங்கானாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

The post ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்! appeared first on Dinakaran.

Related Stories: