மழை பெய்து தண்ணீர் தேங்கி கிடந்த நிலையில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதிகாலை வேளையில் அவ்வழியாக சுற்றித்திரிந்த மூன்று நாய்கள் அறந்து கிடந்த மின் கம்பி பகுதியில் நடமாடிய நிலையில் மின்சாரம் பாய்ந்து பலியாகின. இதற்கிடையே அவ்வழியாக பொதுமக்கள் கடந்து செல்ல முற்பட்ட பொழுது நாய்கள் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மின் கம்பியும் அறுந்து கிடந்ததால் உடனடியாக மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மின்துறையினர் அறுந்த கிடந்த மின் கம்பியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை வேலை என்ற நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கனமழையால் அறுந்து விழுந்த மின் கம்பியால் 3 நாய்கள் உயிரிழப்பு: கடலூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.