தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. அதன் தொடக்கமாக கடந்த இரண்டு நாட்களாக வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. குறிப்பாக, கரூர் பரமத்தி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 103 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. மேலும் கன்னியாகுமரி, கரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 7ம் தேதி முதல் 11ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

The post தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: