இந்த நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, உரிமைக் குழு, திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், 2017ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் அந்த நோட்டீஸ் காலாவதியாகிவிட்டது என்றார். அப்போது, முந்தைய உரிமை மீறல் குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
The post குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதியாகிவிட்டது: ஐகோர்ட்டில் அரசு வாதம் appeared first on Dinakaran.