அப்பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள பெரியாச்சி அம்மன் கோயில் சுவர் மீது மோதி நின்றது. இதில் அங்கு நின்ற பாப்பா (60) என்ற மூதாட்டியும், டூவீலரில் வந்த அன்பழகனும் காயம் அடைந்து, நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் ஓட்டுநர் அருண் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அதிமுக மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் மோதி மூதாட்டி, வாலிபர் காயம் appeared first on Dinakaran.