இதையடுத்து சம்பவ செந்திலை பிடிக்க 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். வெளிநாட்டில் வாங்கியுள்ள நவீனரக துப்பாக்கி எப்போதும் சம்பவ செந்திலின் கையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் போலீசார் தகுந்த பாதுகாப்புடன் அவரை கைது செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். சம்பவ செந்தில் படம் இதுவரை போலீசில் சிக்கவில்லை. பல கொலை, கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டிருந்தாலும் அவர் கைது செய்யப்படவில்லை. பல்வேறு காரணங்களால் போலீசார் கைது செய்யும் பணியை செய்யவில்லை.
அவரது படம் இல்லாததால், எப்படி இருப்பார் என்று தெரியாததால், போலீசாரும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்ைல. சம்பவ செந்திலும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை. ஆனால் கைது செய்யப்பட்ட தமாகா பிரமுகர் ஹரிதரன், சம்பவ செந்திலைப் பார்த்துள்ளதால், அவர் கொடுத்த அடையாளம் மூலம் சம்பவ செந்திலை போலீசார் கம்ப்யூட்டர் மூலம் வரைந்துள்ளனர். அந்தப் படத்தை வைத்து சம்பவ செந்திலை கைது செய்யும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவ செந்தில் கைது செய்யப்படும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post துப்பாக்கியுடன் சுற்றும் சம்பவ செந்திலை பிடிக்க 5 தனிப்படை appeared first on Dinakaran.